Tuesday 31 January 2012

விழிப்புணர்வு



கடதாசி குவளைகள்(பேப்பர் கப்) ஒழிக!


தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் மருத்துவர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, மருத்துவர ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் அலுவலக சிற்றுண்டிச்சாலையில் பயன்படுத்தும், கடதாசி குவளை 'களில்,தேநீர், குழம்பி குடிப்பது வழக்கம்! அந்த, "குவளை 'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் மருத்துவர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலக சிற்றுண்டிச்சாலையில், "கடதாசி குவளைகளை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "குவளைகள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கடதாசி குவளைகளில், மிக சூடான, தேநீரோ, குழம்பி /காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கடதாசி குவளையிலிருக்கும் மெழுகு உருகி,தேநீர் அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
"தேநீர், குழம்பி/காபி அருந்துவதற்கு, கண்ணாடி குவளைகளே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. சில்வர் குவளைகளையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் குழைம‌//////////() (-()//பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, குவளைகளை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் மருத்துவர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.
தயவு செய்து இதை இந்த செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி -https://www.facebook.com/tamilputhandu

No comments:

Post a Comment